இலங்கையில் ஊடக சுதந்திரம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான அமெரிக்க துணை தூதரக அதிகாரி வெலரி ப்ளவர், இந்த கவலையை வெளியிட்டார்.
உண்மையை எழுதுவதற்கும், கட்டுரைகளை பிரசுரிப்பதற்கும் தயக்கம் காட்டப்படுகிறது. சுய தணிக்கை செய்யும் நிலையும், லஞ்சம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கும் தடைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment