Friday, March 5, 2010

சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடலோரத்தில் நிற்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிடைத்த தகவலால், கடல் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கப்பல் மற்றும் விமானங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் வாங் கான் செங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்த அவர், நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் கூறிய அவர், எந்த பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல் சதிக்கு திட்டமிட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை.

இதனிடையே மலேசியாவுக்கும் இதே தாக்குதல் இருப்பதாகவும், இதனால் அங்கும் இதேப்போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com