Monday, March 8, 2010

பொன்சேகாவிற்கு எதிராக 5 குற்றச் சாட்டுக்களுடன் வழக்கு நீதிமன்றுக்கு வருகின்றது.

ஜெனரல் பொன்சேகா கைதாகி இன்றுடன் ஒருமாதமாகியுள்ள நிலையில் இன்னும் ஒரிரு தினங்களில் அவருக்கெரிரான வழக்கு இராணுவ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதுடன், சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக பதியப்பட்டுள்ள 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ சட்டவல்லுனர்கள் ஆராந்ய்து வருவதாகவும் இராணுவ சட்டவல்லுனர்களின் பரிந்துரையை அடுத்து இராணுவத் தளபதி இராணுவ நீதிமன்றிற்கான சிபார்சுகளை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் தொகுப்பில் 22 இராணுவத்தினர், 7 பொலிஸார், 6 பொதுமக்கள் என 35 பேரது சாட்சியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி இன்று ஹட்பாக் கோணரில் கூட்டமொன்று நடைபெறவிருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா,மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதே நேரம் ஜெனரல் பொன்சேகா அவரது உறவினர்களுடன் உரையாடும் பொருட்டு அவருக்கு ஸ்கைப் வசதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவ்வசதிகள் மேலதிகமானவை என நேற்றிலிருந்து மறுக்கப்பட்டபோது அவ்வசதி தொடர்ந்தும் தனக்கு வழங்கப்படவேண்டும் என ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரத் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இன்றிலிருந்து அவரது மனைவி அவரை பார்வையிடச் செல்லும்போது கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் சென்று அவரது மகள் மாருடன் பேசுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தமுடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com