Sunday, March 28, 2010

பொன்சேகாவிற்கு எதிரான 2வது வழக்கின் நீ‌திப‌தி குழு ‌நிய‌மி‌ப்ப‌தி‌ல் தாமத‌ம்

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற நீ‌‌திப‌தி குழு குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இராண்டாவது இராணுவ நீதிமன்றம் தொடர்பான விசாரணைகள் கடந்த 17ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நீதிமன்ற நியமனம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட காரணத்தினால் விசாரணைகள் காலவரையறையின்றி த‌ள்‌ளி வைக்கப்பட்டது. உரிய நீ‌திப‌திகள் நியமிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவது நீ‌திப‌தி குழு‌விற்காக, மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க, மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் மேஜர் ஜெனரல் லலித் களுகல்ல ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ந‌ம்ப‌‌த்தகு‌ந்த தகவல்கள் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன.

No comments:

Post a Comment