Thursday, March 4, 2010

எதிர்வரும் நவம்பர் 18ல் ஜனாதிபதி பதவி ஏற்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாவது முறையாக வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் ஜி எல் பீரிஸ், இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ராஜபக்ச முதல் தடவையாக அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலை நாடாத்தி அதில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 30 நாட்களுள் பதிவிப்பிரமாணம்; செய்து கொள்ளவேண்டும் என்ற கருத்துக்கள் நிலவிய நிலையில் உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி எதிவரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

அவர் பதவியேற்கும் காலத்திலிருந்து ஆறு வருடங்களுக்கு பதவி வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது முதலாவது சேவைக்காலமான 6 வருடங்கள் முடிவடைந்த பின்னர் இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்த்து நீதிமன்றை நாடியதாகவும் அதற்குரிய அனுகூலங்கள் சட்டத்தில் இல்லை என்பதால் தீர்ப்பு சாதகமற்றதாக அமைந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com