Monday, February 8, 2010

நாம் தனித்தே போட்டியிடுவோம். மக்கள் ஈபிடிபி க்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனந்தசங்கரி.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்தே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் வழிநடாத்தியுள்ளதாகவும் , ஈபிடிபியினர் தனித்து போட்டியிட்டால் அவர்கள் யாழ் குடாநாட்டில் மேற்கொண்டுள்ள ஆடாவடித்தனங்கள் மற்றும் கொலைகளில் விரக்தியடைந்துள்ள மக்கள் அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் தேர்தலில் போட்டியிடாது விட்டால் தமது கட்சி 5 மேலான ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் த நேசன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலில் 15 விடயங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை மக்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்திய வடிவிலான பெடரல் ஆட்சி முறை விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment