Thursday, February 18, 2010

வடகொரியாவுடன் உயர்மட்ட பேச்சை தொடங்கியது ஐ.நா.

அணு ஆயுத திட்டத்தை கைவிட வைப்பதற்காக வடகொரியாவுடன் ஐ.நா. உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.இது தொடர்பாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் லின் பாஸ்கோ, வடகொரியாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

வடகொரியாவுடன் நடைபெற்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை குறித்து விவரத்தையும், எதிர்கால பேச்சுவார்த்தை திட்டம் குறித்தும் கேட்டபோது, அது குறித்து பதிலளிக்க மறுத்துள்ளார்.

அதே சமயம் இன்னும் சில தினங்களில் ஒன்று அல்லது இரண்டு ஐ.நா. அதிகாரிகள் விரைவில் வடகொரியா செல்ல உள்ளதாக தெரிவித்தார். .

No comments:

Post a Comment