இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளரான கோத்தபாய ராஜபக்ச ஐந்து நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய நபர்களை கோத்தபாய சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் தெற்காசியாவின் மிகப் பெரிய ஆயுத தளவாட கண்காட்சியையும் கோத்தபாய பார்வையிட்டுள்ளார். இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புகளை நவீன மயப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சியில் ஈடுபட்டுள்ள ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து புதிய யுத்த தளவாடங்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகளிலும் கோத்தபாய ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment