Thursday, February 11, 2010

மஹரகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம்.

ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து இன்று பிற்பகல் மஹரகம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தினை ஜேவிபி, ஐதேக ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகம் செய்துள்ளனர்.

ஆர்பாட்டத்தில் பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கலந்து கொண்டிருந்த பிக்கு ஒருவர் பொலிஸாருடன் வாதத்தில் ஈடுபட்டதாகவும் , பிக்கு பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

1 comments :

Anonymous ,  February 11, 2010 at 5:29 PM  

WHY MAHINTHA AREST SARETH PONSEGA PEOPLES WANT TO KNOW MORE THAN 60% SINGLES SAPOT TO SARETH HE HAS TO COME HOME OTHERWISE LANGA WILL BURN COLOMBOWILL DISRO BY SUPOTERS HIS ARMY ALLSO BECAUSE HE WAS A ARMY LEADER TO RADNASORYA AMERICA

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com