தனியார் ஊடகம் நளினியிடம் பேட்டி எடுக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவிற்கு, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்ற பதில் அளித்துள்ளார்.
தனியார் ஊடகம் நளினியிடம் பேட்டி எடுக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நளினி அனுப்பி இருந்த தந்தி சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தான் எந்த ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க விரும்பவில்லை என்றும் எஞ்சிய காலத்தை தனது மகளின் நலனுக்கான வாழ விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment