Monday, February 22, 2010

மாநாயக்க தேரர்களிடையேயான பனிப்போர் தொடர்கின்றது.

மல்வத்து பிடத்து மாகாநாயக்கர் சங்கைக்குரிய திப்போட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், ஜாதிக்க ஹெல உறுமயவின் தேரர்களைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெனரல் பொன்சேகாவின் கைதினை தொடர்ந்து நான்கு பீடங்களையும் சேர்ந்த பௌத்த பிக்குகள் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் தமது கண்டனத்தை தெரிவிப்பதற்குமாக கடந்த 18ம் திகதி கண்டியில் ஒன்றுகூடவிருந்தனர். ஆனால் அவ் ஒன்றுகூடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணத்தை நான்கு பீடங்களையும் சேர்ந்த பிக்குகள் தெரிவித்திருக்காதபோதும் அவர்கள் மிரட்டப்பட்டதாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மல்வத்து பீட மகாநாயக்கரை சந்திக்க ஆழும் ஆரசாங்கத்தின் தீவிர ஆதரவாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான எல்லாவெல மேதானந்த தேரரின் தலைமையில் பிக்குகள் குழுவொன்று தாயாரானபோதும், அச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

ஜெனரல் பொன்சேகா நாட்டின் இராணுவத்தினுள் பிளவுகள் ஏற்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவும் அதே நேரத்தில் நாட்டில் பௌத்த பிக்குகளை மஹிந்த ராஜபக்ச பிளவுபடுத்தியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment