ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் நாவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் 80 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கம்பொல பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பிக்கு அரசியல் பின்னணி ஒன்றை கொண்டிருந்தவர் எனவும் தேர்தலில் பின்னர் இடம்பெற்ற பழிவாங்கும் செயற்பாடுகளில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் குறிப்பிட்ட பிக்கு எவ்வித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர் எனவும் , அவரது விகாரைக்கு அருகாமையில் இருந்த ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார காரியாலயத்தை தாக்க வந்தவர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதல் அமைச்சுர் ஒருவரின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment