Tuesday, February 16, 2010

ஊடகவியலாளர் சிறிமல்வத்த எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை.

லங்கா நியூஸ்பேப்பரின் பத்திரிகையாளர் சந்தன சிறிலால்வத்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த 18 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கங்கொடவில நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எவ்வித பிணை நிபந்தனைகளும் இல்லாமல் நீதிமன்று விடுவித்துள்ளது. சீஐடி யினரிடம் இவர் தொடர்பான குற்ற்சாட்டுக்கள் என்னவென நீதிபதி கேட்டபோது சீஐடி யினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாமல் திணறியதாக தெரியவருகின்றது.

அதேநேரம் ஜனாதிபதி இன்று சிறிமல்வத்தையை விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியதாக ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி அததெரண செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்களைக் கைது செய்வதானால் ஊடக அமைச்சர் என்ற வகையில் தன்னிடம் தெரிவித்துவிட்டே கைது செய்யவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment