Monday, February 22, 2010

சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆரம்பமாகுமாம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்பளிக்கப்படாத முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் இருவர் இணைந்து புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ரெலோ இயக்கத்தினை சேர்ந்த சிறிகாந்தா , சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து இக்கட்சியை ஆரம்பிக்வுள்ளதாக தெரியவருகின்றது. கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு பெயரும் சூட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டவுடன் இலங்கையில் இயங்கி வருகின்ற தமிழ் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள தேசியம், ஈழம், விடுதலை போன்ற உணர்சியூட்டக்கூடிய சொற்பதங்கள் நீக்கப்படவேண்டும் என அரச தரப்பினரால் உடனடி அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்பட்டிருந்தது. ஜெனரல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையினை அடுத்து மேற்படி விடயத்தில் அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட கவனம் திசை திருப்பப்பட்டது அல்லது தற்காலிகமாக பிற்போடப்பட்டது எனலாம். இவ்வாறான நிலையில் மேற்படி கட்சியின் பெயர் அங்கீகாரம் பெறுமா என்பதும் , அவ்வாறு அங்கீகாரம் பெற்றால் அதன் அரசியல் பின்னணி என்னவென்பதை உணரக்கூடியதாக இருக்கும் என பலரும் பேசிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment