Tuesday, February 23, 2010

டக்களஸ் தேவானாந்தாவிற்கு சத்திய சோதனை.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றுமே பிரியாத வடகிழக்கு என்கின்ற சுலோகங்களைக் கொண்டுள்ள ஈபிடிபி கட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதற்கு இணங்க வடகிழக்கில் சுயமாகவும் , முடிந்தால் மத்தியில் கூட்டாகவும் தேர்தலில் போட்டியிடவேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் தனித்துப்போட்டியிடுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்திருந்தார்.

இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என அவரால் தமிழ் மிரர் இணையதளத்துக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி நள்ளிரவு 12 மணிவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தலில் ஈபிடிபி தனித்தே போட்டியிடப்போகின்றது என கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கட்சியின் தலைவர் டக்களஸ் தேவானந்தாவிற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் யாழ் மாவட்டத்தில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும், தற்போது அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியல் எதிர்காலம் ஒன்று இல்லாது போகும் அபயாம் தோன்றியுள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.

ஆனால் அரசாங்கம் யாழ் சமுகத்தில் இருந்து புதிய முகங்களை உள்வாங்கியுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலில் இடம்கள் ஒதுக்குவதில் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாகவும், இவ்விடயத்தில்கூட பேரம்பேச முடியாதவராக அமைச்சர் சிக்கலில் மாட்டியுள்ளதாக தெரியவருகின்றது. தான் தனித்து போட்டியிடப்போகின்றேன் என கடந்த காலங்களில் அமைச்சர் காட்டிய மவுசே (ஸ்ரண்ட்) இந்நிலைக்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் இடம்பெறப்போகும் வன்முறைகளற்ற இத்தேர்தலில் ஈபிடிபி தனித்து போட்டியிட்டு தமது மக்கள் பலத்தை நிருபித்துகாட்டவேண்டும் என்பதே மக்களில் வேண்டுதலாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment