Tuesday, February 23, 2010

மாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசை தாசனின் பெயரும் இடம்பெற்று ள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங் கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment