Tuesday, February 9, 2010

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அரசியலிலிருந்து வெளியேறுகின்றார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேரர். கட்டபொட அமரகித்த அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இவ்வறிவித்தலை ஊடகங்களுடாக மக்களுக்கு பகிரங்கப்படுத்திய அவர், தான் அரசியலில் வகிக்கும் சகல பதவிகளில் இருந்து ஒதுங்குவதாகவும் , எதிர்காலத்தில் எவ்விதமான அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நாட்டில் இருந்து பயங்கரவாதத்தினை ஒழிப்தற்காகவே ஜாதிக்க ஹெல உறுமய நிறுவப்பட்டதாக தெரிவித்த அவர் அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment