Tuesday, February 23, 2010

ஐ.தே.கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புதிய ஜாதிக ஹெல உறுமய.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட எடுத்துள்ள முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மானமேந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி எனும் பெயரில் இணைந்து கொண்ட 16 கட்சிகளும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி ஐக்கிய தேசியக் கட்சி சுயலாபநோக்கில் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பவாதத்திற்காக யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் , சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை காட்டிக்கொடுக்குமுகமாக தாம் எதேச்சையாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com