Thursday, February 11, 2010

ஐனாதிபதியை தொலைபேசியல் தொடர்பு கொண்டார் பான் கீ மூன்.

சரத் பொன்சேகாவின் கைது விடயத்தில் சட்டப்படி செயல்படுமாறு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், மஹிந்த ராஜபக்சவை தொலைபேசியில் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசாங்கம் பொன்சேகாவின் விடயத்தில் சட்டத்தை உரியமுறையில் செயற்படுத்துவதுடன், அவரின் சொந்த பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் பான் கீ மூன் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்களை அறிய, ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை செயலாளர் லியம் பொஸ்கோவை இந்த மாத இறுதியில் இலங்கைக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் அப்போது கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment