Monday, February 8, 2010

இலங்கை சீனா உறவு மேலும் வலுவடையும்:

சிறிலங்கா-சீனா இடையிலான நல்லுறவை வளர்க்க ராஜபக்சவுடன் தொடர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளதாக சிறிலங்காவின் 62வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.

இலங்கையும், சீனாவும் நல்ல அண்மை நாடுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளர்கள் என்றும் வரப்போகும் ஆண்டுகளின் இருதரப்பு உறவுகள் மேலும் புதிய வளர்ச்சி காணும் என ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கில் நடந்து வருகின்ற வளர்ச்சிப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீன அரசு இதுவரை 6.1 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதுதவிர மேலும் ஒரு 350 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளிக்க சீனா அரசு சம்மதித்துள்ளது.

சிறிலங்காவின் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய இந்த நிதியுதவி உதவியாக இருக்கும் என்றும், தேசியக் கட்டமைப்பில் புதிய வளர்ச்சியைக் கொண்டுவரும் என்றும் தாம் நம்புவதாக சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment