Thursday, February 4, 2010

உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம் ஒன்றை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது.

தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் 4 சக்கர வாகனம் ஒன்றை, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கி உள்ளது. இதற்கு „உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக் கூடியது. 200 மீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்ககூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வண்டியில் இரவு நேரத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடிய வீடியோ கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் வெடிகுண்டைப் பொருத்துவதற்காக, ஒரு குழிவான பகுதியும் உள்ளது. இந்த வாகனத்தை தீவிரவாதியின் மறைவிடத்துக்குள் நுழைய வைத்து, 200 மீட்டர் தூரத்தில் இருந்தபடி இயக்கி, குண்டு வெடிக்கச் செய்து தீவிரவாதியை அழிக்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com