Monday, February 22, 2010

ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டி. அருஜூணாவும் இணைவு.

ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி எனும் கூட்டணிக்கு ஜெனரல் பொன்சேகாவே தலைவர் என ஜேவிபி அறிவித்துள்ளது. இக்கூட்டணியில் ஜேவிபி உட்பட சுமார் 8 கட்சிகள் அங்கம் வகிப்பதாக தெரியவருகின்றது. இக்கூட்டணின் சின்னமான வெற்றிக் கிண்ணச் சின்னத்திலேயே அனைவரும் போட்டியிடுவதென்ற ஏகமனதாக முடிவை எட்டியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கிண்ணச் சின்னத்தில் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கட் சபைத் தலைவருமான அருஜூனா ரணதுங்கவும் போட்டியிடவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது முடிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கூறுகையில், இந்நாட்டினை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த தலைவருடன் இணைந்து போட்டியிடுவதில் மகிழ்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் தென்மேல் மாகாணசபையில் உள்ள அருஜூனாவின் சகோதரன் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.


No comments:

Post a Comment