Tuesday, February 23, 2010

இடைத்தங்கல் முகாம் மக்களை மீள்குடியேற்ற அரசாங்கத்திடம் காலக்கெடு இல்லை.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழர்களது மீள் குடியேற்றம் தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நலன்புரி நிலைய மக்களை மீள் குடியேற்றுவதாக இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கேட்ட போது, மீள் குடியேற்றம் தொடர்பாக காலக்கெடு எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்.

முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், எனினும் அதற்கான கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment