Wednesday, February 10, 2010

அம்பாறை, காலி, மாத்தறையில் ஆர்பாட்டம் : பொலிஸார் கண்ணீர்ப்புகை : தேரர்கள் கண்டனம்.

ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றது. இன்று காலை கொழும்பு புதுக்கடைப்பிரதேசத்தில் ஆர்பாட்டங்கள் ஆரம்பித்திருந்தன. அதை தொடர்ந்து காலி, அம்பாறை , மாத்தறை உட்பட மேலும் பல பிரசேங்களிலும் எதிர்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வார்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பரவலாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இச் செய்திகளை ஊர்ஜிதப்படுத்தியுள்ள பொலிஸ் பேச்சாளர் ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு செய்யும்போது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்வதாக தெரிவிததுள்ளார்.

அதேநேரம் கைதினை நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தேரர்கள் கண்டித்துள்ளனர்.

No comments:

Post a Comment