Wednesday, February 24, 2010

கண்டியில் ரவூப் ஹகீம் போட்டியிட எதிர்ப்பு : பொன்சேகாவின் முன்னணியில் இணைந்து போட்டி?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில்போட்டியிட இடமளிக்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருவாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கண்டி மாவட்டத்தலைவர் காதர் ஹாஜியார், உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இரு முஸ்லிம் வேட்டபாளர்கள் இடம்பெறும் தருணத்தில் மூன்றாமவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தல் உசிதமான விடயம் அல்லவென்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று நள்ளிரவுவரை ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் கண்டி மாவட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் எந்த தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதென்ற முடிவு இதுவரை எட்டப்பட்டிராத நிலையில், அவருக்கு கண்டியில் போட்டியிடவேண்டிய அவசியம் ஏற்படின் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான முன்னணியுடன் இணைந்து கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment