Saturday, February 27, 2010

பொலிஸாரின் சமிக்கைக்கு கீழ்படியாத வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம். ஓருவர் பலி.

மாத்தளைப் பொலிஸ் சாவடியைச் சேர்ந்த பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு விடுத்த சமிக்கைக்கு கீழ்படியாது தப்பியோட முற்பட்ட வாகனம் ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு ரத்தோட்டைப் பிரதேசத்தில் வழிப்போக்கர் ஒருவரை வாகனத்தால் அடித்துவிட்டு குறிப்பிட்ட வாகனம் தப்பியோடியுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவலை தெரிவித்து அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உஷாரடைய வைத்திருந்த நிலையில் குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்தில் காயமடைந்த பாதசாரியும், துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் இருந்தவர்கள் மதுபாணம் அருந்தியிருந்தாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்தர்ப்பத்தில் பொலிஸார் உயிர்ச்சேதம் ஏற்படும்படியாக துப்பாக்கி பிரயோகம் செய்யமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாகனத்தினை மடக்கி பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கவேண்டும்.

No comments:

Post a Comment