Monday, February 22, 2010

அணுவாயுதச் செய்திகளை மறுத்தார் ஈரானின் உச்சத் தலைவர்

ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பதாக வெளிவந்த செய்தியை ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மறுத்திருக்கிறார். ஈரானியர்களின் நம்பிக்கைகள் “இத்தகைய ஆயுதங்களின் உபயோகத்தைத் தடை செய்வதால்”, ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்ற அச்சம் “ஆதாரமற்றது” என்று அவர் சொன்னார்.

ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக அணுசக்தி ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறியது. அதைத் தொடர்ந்து, பல உலக நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்த அறிக்கை “பீதியளிப்பதாக” ரஷ்யா கூறியது. ஈரான் அதன் அனைத்துலகப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஈரானின் யுரேனிய, அணுசக்தி நடவடிக்கைகள் பற்றிய தங்களது “மிகப்பெரிய கவலைகளை“ இந்த அறிக்கை வலுப்படுத்தியதாக பிரிட்டனும் ஜேர்மனியும் கூறின.

அனைத்துலக அணுசக்தி ஆணையத்திற்கு ஈரான் அளிக்கும் ஒத்துழைப்பு குறைந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இதனால், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்து ஐயம் எழுவதாக அறிக்கை கூறியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com