Wednesday, February 3, 2010

தேர்தல் ஆணையாளர் மனமாற்றம்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தன்னை ஓய்வு பெற வழிவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்த தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, தனது முடிவில் மாற்றம் செய்து தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தனது சக ஊழியர்களின் வேண்டுதலுக்கிணங்க தான் தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளதாக இன்று ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகவிருந்த நிலையில் தேர்தல் ஆணையாளர் அரச தரப்பினரால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டிருந்தாக வெளிவந்திருந்த செய்திகளை முற்றிலும் வதந்திகள் எனவும் தான் அவ்வாறு எந்த தரப்பினராலும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் கூறிய அவர், தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யவேண்டிய அளவுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில சம்பவங்கள் விசாரணை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com