Tuesday, February 23, 2010

திருமலை , வன்னி மாவட்டங்களில் ரிஎம்விபி வேட்பாளர் மனுக்களை பாரமளித்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் திருமலை, வன்னி மாட்டங்களுக்கான தமது வேட்டபாளர் மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் பிள்ளையானின் இணைச் செயலாளர் யூடி தேவதாசன் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஈபிடிபியில் இருந்து பிரிந்து சென்றவரும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் முன்னாள் ஆலோசகருமான டாக்டர் விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி யும் ரிஎம்விபி யுடன் இணைந்து வள்ளம் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

ரிஎம்விபி யின் பேச்சாளர் அசாத் மௌலானா , கட்சியின் முன்னாள் தலைவர் (கொலைசெய்யபபட்ட) ரகு எனப்படும் நந்தகோபனின் சகோதரர் நலினகாந்தன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment