Monday, February 1, 2010

ஜெனரல் பொன்சேகா வின் இரு மகள்மாரும் நாட்டைவிட்டு வெளியேறினர்.

ஜெனரல் பொன்சேகாவின் இரு மகள்மாரும் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்கு செல்வதற்கான தமது முதலாவது விமானத்தை கட்டுநாயக்கவில் எடுத்துள்ளனர்.

அவர்கள் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. அதேநேரம் ஜெனரலின் மருமகன் தனுக திலகரத்தின அவர்களுடன் செல்லவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com