Tuesday, February 9, 2010

அனோமா பொன்சேகா ஐசிஆர்சி யை நாடியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் தனது கணவனை கண்டுபிடிப்பதற்கும் அவருக்கு தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடியுள்ளார்.

இவ்விடயத்தினை ஐசிஆர்சியின் பேச்சாளர் சரசி விஜெரத்ன உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மறுமுறத்தில் ஜெனரல் பொன்சேகாவின் மனைவி இன்று பிற்பகல் அவரை பார்வையிட்டதாகவும், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாட் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment