Tuesday, February 23, 2010

இலங்கை அரசின் போக்கில் அமெரிக்காவிற்கு திருப்தி இல்லையாம்

சரத் பொன்சேகா விடயத்தை இலங்கை அரசு, தனது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கையாள வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. பிபிசி- க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக், பொன்சேகா விடயத்தை ராஜபக்ச அரசு கையாளும் விதம் தங்கள் நாட்டுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் கூறினார்.

பொன்சேகா மீது சரியான முறையில் குற்றம்சாற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கருதினால், அந்நாட்டின் சட்டவிதி முறைகளுக்கு உட்பட்டு அப்பிரச்னையை கையாள வேண்டும் என அந்த பேட்டியில் ராபர்ட் பிளேக் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பேட்டியில் அவர் கூறினார்.

No comments:

Post a Comment