Friday, February 5, 2010

தேர்தல் வன்முறைகளில் தாக்குதலுக்கு உள்ளான ஜேவிபி உறுப்பினரின் மரணச்சடங்கு இன்று.

தேர்தலுக்கு முதல் நாள் (25-01-2010) இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளின் போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் வைத்தியசாலையில் மரணமடைந்த ஜேவிபி உறுப்பினர் சந்திரதாச நைடுவவடு அவர்களின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறும் என ஜேவிபியின் பிரச்சார பிரிவு அறிவித்துள்ளது.

அரசின் கூலிப்படைகளான காடையர்களே தமது உறுப்பினர் மீது தாக்குதல் நடாத்தியதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கில் ஜேவிபியின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment