Friday, February 26, 2010

விமலின் கரு கத்தாநாயகதுமணி வெளிவந்தது.

ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணி எனும் கட்சியை நிறுவியுள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கரு கத்தாநாயகதுமணி (கனம் சபாநாயகர் அவர்களே) எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பேசிய அனைத்துப் பேச்சுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தின் முதலாவது பிரதி நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. அலறி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்நிகழ்வில் அவரது கட்சிக்கான உத்தியோக பூர்வ இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment