Monday, February 15, 2010

அதிரடி ஆட்டநாயகன் சனத் அரசியலில் குதிக்கின்றார்.

இலங்கையின் கிரிக்கட்துறையில் அதிரடி ஆட்டநாயகனாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சனத் ஜெயசூரியா அரசியலினுள் நுழைகின்றார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது. இவ்விடயத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. OK It's fine.Popularity always has a kind of preference.We`ll see how they're going to make use of their popularity to the public or the people whom they represent.Thank you

    ReplyDelete