Wednesday, February 17, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா நீக்கம்

எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில், சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிருந்தார்.இந்நிலையில், கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசி சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமான 'டெலோ' கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment