Sunday, February 14, 2010

கருணாவின் சகோதரி தேர்தலில் குதிக்கின்றாராம்.

புலிகளியக்கத்தின் முன்னைநாள் கிழக்கு மாகாணத் தளபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் சகோதரி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கருணா போட்டியிட மாட்டார் எனவும் அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவதற்கு இம்முறையும் சந்தர்ப்பம் அளிக்க கட்சி வட்டாரங்கள் தீர்மானித்துள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

இலங்கை சிங்கள நாளேடுகளிலும் ஜேவிபி சார்பு இணையத்தளங்களிலும் இச்செய்தி வெளியாகியுள்ளதுடன் இவ்விடயம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கைநெற் செய்தியாளர்கள் கருணா தரப்பினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். பூரண விபரங்களுடன் விரைவில்....

No comments:

Post a Comment