ஜப்பான் கடல் பகுதியில் கடுமையான பூகம்பம்
ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள பல தீவுகளில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
தெற்கு ஜப்பானில், கடற்கரையில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள மியாகோஜிமா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் தாக்கத்தை பக்கத்து தீவுகளில் கடுமையாகவும், தைப்பீ உள்ளிட்ட நகரங்களில் லேசாகவும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
பல இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையம் தெரித்தது.
அமெரிக்க புவியயல் ஆய்வு மையத் தகவலின் படி இந்த நிலநடுக்கம் 6.4 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
0 comments :
Post a Comment