Tuesday, February 23, 2010

ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராவும் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரது மனைவியால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், மனுவில் ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படும்வரை அவரை தற்காலிகமாக நீதிமன்று விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்க்கப்பட்டிருந்தது.

அவ் வழக்கினை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்று அவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அவரைச் சென்று பார்வையிடலாம் என தீர்ப்பளித்துள்ளது. மேலதிக விபரங்கள் தொடரும்....

No comments:

Post a Comment