Monday, February 15, 2010

பொன்சேகாவின் மருமகனும் கைதாகிறார்: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஹய்கோப் நிறுவனத்துடனான ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையின் போது, ரகசிய போலீஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரான தனுன திலகரட்னவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்த ரகசிய போலீஸார், அவரது தாயாரது வங்கி பாதுகாப்பு வைப்பகத்தில் இருந்து ரூ. 7 கோடி 50 லட்சத்தை மீட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதேவேளை, பொன்சேகாவின் மருமகன் வசிக்கும் இடம் குறித்து தகவல்கள் தெரியாத நிலையில், அவரை கைது செய்வதற்கான பிடியணையை பிறப்பிக்குமாறும் போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனுன திலகரட்னவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தார்.

No comments:

Post a Comment