Friday, February 12, 2010

ஐ.தே.கட்சி யானை சின்னத்தில் : ரிம்விபியின் வள்ளத்தில் ஓட்டையாம்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொது தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தபோது. எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புவதாக தெரியவருகின்றது.

அதேநேரம் ரிம்விபி யினர் நேற்று ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்துள்ளபோதும் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அன்றில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா என்ற முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து வருவதாக செய்திகள் பலவடிவங்களில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவியை அரச தரப்பினரே இறுதி தருணத்தில் தீர்மானிப்பர் என கட்சி மூத்த உறுப்பினர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment