ஜேவிபி யும் ஜெனரல் பொன்சேகாவும் இணைந்து இராணுவப் புரட்சி ஒன்றினை மேற்கொள்ளவிருந்ததாக அரசினால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டினை எதிர்கட்சிகளின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜெனரல் பொன்சேகா உட்பட 50 பேரை அரசாங்கம் எவ்வித ஆதரங்களும் இல்லாமல் இராணுவப் புரட்சி எனும் பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைத்துள்ளனர். ஜேவிபி யினர் தமது அரசியலை நேரிய வழியிலேயே செய்து வந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment