பிள்ளையானின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை : மாற்றப்பட்டுள்ளது.
கிழக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவரது பாதுகாப்பு வாபஸ் பெறபடவில்லை எனவும் இராணுவத்தினரிடம் இருந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். விசேட பயிற்சி பெற்ற 40 கொமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருந்தனர் எனவும் தற்போது அவ்விடத்திற்கு 6 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.
மேலும், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சிலரை தவிர அனைவருக்கும் பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்படும் எனவும், இராணுவத்தினர் அரசியல் தொடர்புகளை கொள்வதை தடுக்கும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment