Thursday, February 25, 2010

பிரிட்டிஷ் பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் புதிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். பிரதமர் அலுவலக ஊழியர்களை அவர் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்படும் வேளையில் மேலும் ஒரு சிக்கல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சித்ரவதையை எதிர்க்கும் ஓர் அமைப்பு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் சிலர் அந்த அமைப்புடன் தொடர்பு கொண்டு பிரதமரைப் பற்றி குறை கூறியதாகத் தெரிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் 3 அல்லது 4 பேர் தங்கள் அவசர அழைப்பு எண்ணுடன் தொடர்பு கொண்டதாக அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி கிறிஸ்டின் பிராட் கூறினார். பிரதமர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று பிரதமர் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார். திரு பிரவுன் அவரது அலுவலக ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாக அரசியல் செய்தியாளர் ஆண்டுரு ரான்ஸ்லி அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

1 comment:

  1. However,whatever it is a preliminary
    inquiry should be conducted,in case if it is proved the prime minister is
    truly answerable and punishable,in case if it is a fabricated story the culprits should be taken into the
    hands of law.

    ReplyDelete