சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்..
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கையில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பா.ஜ.க. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது பாதுகாப்பு மற்றும் நலத்தினை உறுதிசெய்வதுடன், கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க அதிபர் ராஜபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்கிறது.
அண்டை நாடான இலங்கையில் இதுபோன்று ஒரு ஜனநாயக அத்துமீறல் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ராஜபட்ச அரசு உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனவும் பா.ஜ.க. கேட்டுக்கொண்டுள்ளது.
I have been hunting for a long time for this! Finally I found it on Yahoo.
ReplyDeleteThx
BAO
[url=http://fightclubdvd.kharkov.ru/]click[/url]