Wednesday, February 24, 2010

ஐ.தே.முன்னணியின் அழைப்பை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரச்சாரச் செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னப்பறவைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்து ஜெனரல் பொன்சேகா தலைமையில் தமது கட்சி கிண்ணம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா, மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா ஆகியோரை ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு நேற்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசிய முன்னணி இன்று கலந்துரையாடியதாகவும் அவர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment