தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ , கடற்படை அதிகாரிகள் பிணைமனு.
ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பாட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுனில் டீ சில்வா மற்றும் முன்னாள் கடற்படை உயரதிகாரி நிகால் சந்திரசிறி ஆகியோர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் பிணை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள மஜிஸ்திரேட் ஹிகான் ரணவக்க மேஜர் ஜெனரல் சுனில் டீ சில்வாவின் பிணை மனு பெப்ரவரி 23ம் திகதியும் கடற்படை அதிகாரியின் பிணைமனு மார்ச் 16ம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment