Tuesday, February 23, 2010

வேட்பாளர் பட்டியலில் இடம்தேடி அலையும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடம்தேடி அலைவதாக தெரியவருகின்றது. முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர அவர்கட்கு ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விடயத்தில் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் பொலிஸ் பேச்சாளர் தனது பிரதேச மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் சிலருடன் அலறிமாளிகை சென்று தான் போட்டியிட விரும்பும் குருநாகல் மாவட்ட பொல்காவல பிரதேசத்திலிருந்து பிரதிநிதித்துவம் ஒன்று தேவை என்ற அவசியத்தை விளக்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

அதே நேரம் பொலிஸ் திணைக்களத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கொட்டகதெனிய அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இடம்தேடுவதாக தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் மாகாண சபை ஒன்றின் உறுப்பினராகவுள்ள அவர் கம்பஹா மாவட்டத்தில் மிரிகம தேர்தல் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரியவருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காததை அடுத்து ஜேவிபி யிலிருந்த பிரிந்து சென்ற விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்படும் இடத்தில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுக்கள் இடம்பெறுவதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

No comments:

Post a Comment