Wednesday, February 3, 2010

தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டு முகமாக இன்று லிப்படன் சுற்றுவட்டத்தில் ஆர்பாட்ட பேரணி ஒன்ற நடாத்துகின்றனர். பொலிஸாரின் பலத்த எதிர்புக்கும் மத்தியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இப்பேரணியில் சுமார் பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன

No comments:

Post a Comment