Monday, February 1, 2010

பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டது: ப.சிதம்பரம் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புலிகள் தலைவர் பிரபாகரன் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இலங்கை இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அவருடைய மரண சான்றிதழை ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கேட்டது.

ஆனால் இதுவரை மரண சான்றிதழை இலங்கை தரவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறி இருந்தார். இதை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மறுத்துள்ளார். பிரபாகரன் இறந்ததை உறுதி செய்து மரண சான்றிதழை இலங்கை கொடுத்து விட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

No comments:

Post a Comment